Thursday, May 5, 2022

இது வயிற்றில் உள்ள வாயு அழுக்குகள் அனைத்தையும் கரைத்து மிகவும் சுத்தமாக மாற்றும் !



விரிவாக படிக்க >>

செல்போனில் எச்சில் துப்பி அன்லாக் செய்த இளம்பெண் – வைரலாகும் வீடியோ!



அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது செல்போனை எச்சில் துப்பி அன்லாக் செய்த அதிசயம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் வசித்து வரும் இளம்பெண் மிலா மோனட். இவர் தனது தோழிகளுடன் மதுபான விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். தனது திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் செல்போனை வெளியே எடுத்து சமதளத்தில் வைத்துள்ளார்.

இதன் பின்னர் அதன் கீபேடில் உள்ள ஒவ்வொரு எண்ணிலும் சரியாக எச்சிலை துப்ப தொடங்குகிறார். இதுபோன்று 6 வெவ்வேறு எண்களின் மீது துப்பியதும் செல்போன் அன்லாக் ஆகிறது.

உடனே மெல்ல தலையை தூக்கி எதிரில் இருப்பவர்களை நோக்கி, வாயின் ஓரத்திலுள்ள எச்சிலை துடைத்தபடியே...

விரிவாக படிக்க >>

Wednesday, May 4, 2022

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.108 கோடி சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை



சென்னை: மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.108 கோடி சொத்துக்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம், ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 11 நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றபட்டு மீண்டும் அறக்கட்டளை வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சுமார் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த 46 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது முதற்கட்டமாக 22 ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றுவதற்கு...

விரிவாக படிக்க >>

Tuesday, May 3, 2022

இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம், கொடூர வெயிலை சமாளிக்க சில சூப்பர் டிப்ஸ்



கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கும் ஒரு விஷயமாகும். அதுவும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில், வெப்பமும் சூடும் மிக அதிக அளவில் இருப்பது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் பெறும் வேளையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு கத்திரி வெயில் இன்று முதல் அதாவது மே 4 ஆம் தேதி தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில்...

விரிவாக படிக்க >>

சச்சினும் அவரது பெற்றோரும் போகிறார்கள்! என்று டெல்லி மக்கள் எங்களை கிண்டல் செய்தனர்: சஞ்சு சாம்சன்


சச்சினும் அவரது பெற்றோரும் போகிறார்கள்! என்று டெல்லி மக்கள் எங்களை கிண்டல் செய்தனர்: சஞ்சு சாம்சன்


கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தனது முந்தைய நாட்களில் டெல்லியில் இருந்தபோது தனது பெற்றோர்கள் எப்படி அவதூறுகளை எதிர்கொண்டார்கள் என்பதை நினைவு கூர்ந்தார்.  

"எங்கள் பெற்றோர்கள், எங்கள் கிட் பேக்குகளை [நானும் என் சகோதரனும்] மிகவும் சிறியவர்களாக இருந்ததால் எடுத்துச் செல்வார்கள். 'சச்சினும் அவரது பெற்றோரும் போகிறார்கள்... அவர் டெண்டுல்கராக மாறுவார்' என்று மக்கள் குறிப்பிடுவார்கள்," என்று அவர் கூறினார்.  சாம்சன் மேலும் கூறினார், "இப்படி நிறைய வேடிக்கையாக இருந்தது...

ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்."

+2 பொதுத்தேர்வு! முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!


+2 பொதுத்தேர்வு! முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!


தமிழ்நாட்டில் நாளை மறுநாள் +2 பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், முக்கிய பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதலே, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.

வைரஸ் பாதிப்பு இந்தாண்டு தான் குறைந்துள்ள நிலையில், நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.

 

பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், இதற்கான கால அட்டவணையைக் கடந்த மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி +2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் (மே 5) முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதேபோல +1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரையும் 10ஆம் வகுப்புக்கு மே 6 முதல் 30 வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

 

தமிழக அரசு

இதற்கான ஹால் டிக்கெட்டும் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றித் தேர்வு நடைபெறும் என்ற போதிலும், மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வு எழுதும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

செல்போனுக்கு தடை

இதனிடையே பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைத் தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டதால் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்தார்.

 

ஆள்மாறாட்டம்

அதேபோல பொதுத் தேர்வில் காப்பி அடித்தால், தேர்வை ரத்து செய்து அடுத்த ஓராண்டுக்குத் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், குறிப்பிட்ட நபருக்குத் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிரத் தேர்வு அறைகளில் நடக்கும் 15 வகையான குற்றங்களைப் பட்டியலிட்டு, அதற்கான தண்டனையையும் பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது,

 

வினாத்தாள்

மேலும், பொதுத் தேர்வு மையங்களில் உள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகத் தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆவது சர்ச்சையாகி உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Sunday, May 1, 2022

ரெண்டு நாளைக்கு வெயில் கொளுத்துமாம்... உஷாரா இருங்க மக்களே!



தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

01.05.2022, 02.05.2022: தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

03.05.2022 முதல் 05.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் மூடப்படும் ரெனால்ட் நிசான் நிறுவனம்?...

விரிவாக படிக்க >>

Thursday, April 28, 2022

ஐஸ்கிரீம் பெட்டிக்குள் சிக்கிய குழந்தைகள் பலியான பரிதாபம்| Dinamalar



விரிவாக படிக்க >>

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்..! 



இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்த ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்தது. ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்துவந்தது.

ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி  மட்டுமே பெற்றது. தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வி அடைந்துவந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் அண்மையில் விலகினார். 


விரிவாக படிக்க >>

சீன அரசின் ரகசியங்களை கசியவிட்டதாக 10 வயது சிறுவன் மீது விசாரணை: பெற்றோர்கள் சந்திக்க, பேசத் தடை!



10 வயதான செங் லீ (Cheng Lei) என்ற சிறுவன் சீனாவில் பிறந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தவர். இவர் சீனாவிற்கு வெளியே உள்ள அரசு ரகசியங்களை சட்டவிரோதமாக வெளிப்படுத்தியதாகவும், 10 வயதான செங் லீயை சீன அரசு கண்காணித்து வருவதாகவும் 2020-ல் ஆஸ்திரேலிய தூதரகம் அறிவித்திருந்தது. இதையடுத்து இது தொடர்பாக செங் லீயை விசாரணைக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது சீன அரசு.

மேலும் செங் லீ - யின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செங் லீயைச் சந்திக்கத் தடைவிதிக்கப்படுள்ளது. தற்போது செங் லீக்கு கடிதங்கள் மூலம் மட்டுமே தொடர்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரின் வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினர் விசாரணை குறித்து வெளியில் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகள் விரைவில்...

விரிவாக படிக்க >>

Tuesday, April 26, 2022

ஒரு சேலஞ்சும் இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ்- ‘பேக் டு ஃபார்ம்’- பந்தாடிய ராஜஸ்தான்



புனேயில் நேற்று நடைபெற்ற 39வது ஐபில் டி20 லீக் ஆட்டத்தில் சில வெற்றிகளுக்குப் பிறகு பழைய பார்முக்குத் திரும்பிய ஆர்சிபி அணி 145 ரன்கள் வெற்றி இலக்கைக் கூட விரட்ட முடியாமல், குல்தீப் சென் (4/20), அஸ்வின் (3/17), பிரசீத் கிருஷ்ணா (2/23) ஆகியோரது அதிரடிப் பந்து வீச்சில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.

2021 ஐபிஎல் சீசனில் பயங்கரமாக சொதப்பிய ரியான் பராக் என்ற 20 வயது வீரர் நேற்று சமயத்துக்கு ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடி 31 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 ரன்களை எடுக்க 4/68 என்ற நிலையிலிருந்து ராஜஸ்தான் 144 ரன்களை எட்டியது. இது எளிதில் விரட்டப்படக்கூடிய இலக்குதான் .ஆனால் இலக்கற்ற ஆர்சிபிக்கு இது பெரிய இலக்கு.

இதற்கு முன்பாக இதே ஐபிஎல் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் 156 ரன்களை வெற்றிகரமாக தடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை...

விரிவாக படிக்க >>

நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிக்கு மாதம் ரூ.900: ம.பி., அரசு அறிவிப்பு



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...

விரிவாக படிக்க >>

ஓமைகாட், மறுபடியுமா?: கவலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்



ஜீத்து ஜோசப்இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்மோகன்லால்நடித்து வந்த12th Manபடத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் தன் படம் தியேட்டர்களில் அல்ல மாறாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸாகும் என்று சமூக வலைதளங்களில் மோகன்லால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அறிவிப்புடன் பட போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஒரு பங்களா முன்பு சிலர் பயத்துடன் நிற்பது போன்று அந்த போஸ்டரில் இருக்கிறது.
அவரின் அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்னதாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 படம்...

விரிவாக படிக்க >>