Sunday, April 17, 2022

Thursday, April 14, 2022

40 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை..!!!: ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,006-க்கும், சவரன் ரூ.40,048-க்கும் விற்பனை



சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,000-ஐ தாண்டியது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்பொழுது எதிர்பாரா வகையில் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. இந்நிலையில், நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்தது.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.5,006-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,048-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400-க்கு விற்கப்படுகிறது.

Tags:...

விரிவாக படிக்க >>

Wednesday, April 13, 2022

போஸ்ட் ஆபீஸில் வட்டி கிடைக்க வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்!



போஸ்ட் ஆபீஸில் செயல்படும் மிகச் சிறந்த சிறுசேமிப்பு திட்டங்களான தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் டெர்ம் டெபாசிட் ஆகியவற்றின் வட்டி ரொக்கமாக வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் வட்டி பணம் கிடைக்க வாடிக்கையாளர்கள் இந்த கணக்குடன் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது தபால் சேமிப்பு கணக்கை இணைக்க வேண்டும் என என்று அஞ்சல் துறை வலியுறுத்தியது. இந்த புதிய மாற்றம் 1 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வந்தது.

அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட குறிப்பில் "கணக்கு வைத்திருப்பவரின் அஞ்சலக சேமிப்புக் கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் தனது சேமிப்புக் கணக்கை மூத்த குடிமக்கள் சேமிப்புத்...

விரிவாக படிக்க >>

உக்ரைன் வீரரின் மனைவி என்று தெரிந்ததும் பாலியல் வன்முறை செய்தனர்.. ரஷ்ய ராணுவம் மீது பெண் குற்றச்சாட்டு



உக்ரைன் ராணுவ வீரரின் மனைவியை ரஷ்ய படையினர் துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் வாழ விரும்பவில்லை என்றூ பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்யா ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இதுவரை நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைனில் மனித உரிமைகள் மீறலில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அந்நாட்டு பெண்களை ரஷ்ய ராணுவம் பாலியல்...

விரிவாக படிக்க >>

Tuesday, April 12, 2022

உத்தப்பா, ஷிவம் துபே அதிரடி - 216 ரன்கள் குவித்த சென்னை அணி



ஐ.பி.எல் 2022 தொடரின் 22-வது போட்டியில் பெங்களூரு அணியும்,சென்னைஅணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா களமிறங்கினர். கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூத்ராஜ் இந்தத் தொடரில் தடுமாறிவருகிறார். அது இந்தப் போட்டியிலும் அவர் ஆட்டம் மோசமாக அமைந்தது. 16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார். 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 6.4 ஓவரில் வெறும் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா, ஷிவம்...

விரிவாக படிக்க >>

காண்டம் விளம்பரத்தை பகிர்ந்த சிம்புவின் வருங்கால மனைவி? வீடியோ வைரல்!



சிம்புவின் வருங்கால மனைவி என்று கூறப்படும் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண்டம் விளம்பரத்தை பகிர்ந்துள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இவர் சிம்புவை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஒரு வதந்தி உலா வருகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் தனது பக்கத்தில் காண்டம் விளம்பர வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த விளம்பரத்தில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அவர் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். சிம்புவுக்கு மனைவியாகப் போகிறவர்...

விரிவாக படிக்க >>

Monday, April 11, 2022

oppo f21 pro unboxing tamil | First Impression - கேமரா சாம்ராட் 🔥


oppo f21 pro unboxing tamil | First Impression - கேமரா சாம்ராட் 🔥


நகராட்சியில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்!மக்கள் கருத்து கேட்கலாம் என சமாளிப்பு



பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி உயர்வுக் கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசர கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்; மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ம.தி.மு.க., மற்றும் சுயே., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம், தலைவர் சியாமளா தலைமையில் நேற்று நடந்தது.
கமிஷனர் தாணுமூர்த்தி, துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மண்டல அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்து, சொத்து வரி உயர்த்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், 600 சதுரடிக்கும் குறைவான பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 25 சதவீதம்; 601 முதல், 1,200 சதுரடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யலாம்.மேலும், 1,201 முதல், 1,800 சதுரடி வரை...

விரிவாக படிக்க >>