Thursday, April 7, 2022

எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (07.04.2022) கடைசி நாள் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலையில் இருந்த இணைய சர்வர் தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக கோளாறு ஏற்பட்டுள்ளது.

Also Read : எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் 1,625 காலிப்பணியிடங்கள்

இதனால் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வருகிற 17-ம்தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment