Monday, April 11, 2022

நகராட்சியில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்!மக்கள் கருத்து கேட்கலாம் என சமாளிப்பு



பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி உயர்வுக் கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசர கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்; மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ம.தி.மு.க., மற்றும் சுயே., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம், தலைவர் சியாமளா தலைமையில் நேற்று நடந்தது.
கமிஷனர் தாணுமூர்த்தி, துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மண்டல அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்து, சொத்து வரி உயர்த்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், 600 சதுரடிக்கும் குறைவான பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 25 சதவீதம்; 601 முதல், 1,200 சதுரடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யலாம்.மேலும், 1,201 முதல், 1,800 சதுரடி வரை...

விரிவாக படிக்க >>

பாரம்பரிய மீன்பிடித் திருவிழா... 1000க்கும் மேற்பட்டோர் ஊத்தா கூடைகளுடன் பங்கேற்பு



Home » photogallery » tamil-nadu » SIVAGANGAI DISTRICT TRADITIONAL FISHING FESTIVAL MORE THAN 1000 PEOPLE PARTICIPATE WITH PURPLE BASKETS SKV

Sivaganga District | காரைக்குடி அருகே கே.ஆத்தங்குடி கண்மாயில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஊத்தா மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீனை பிடித்துச் சென்றனர்.


சீர்காழியில் வளர்ப்பு நாய்க்கு சீமந்தம்



விரிவாக படிக்க >>

ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் and ஃபேண்டஸி லெவன்!


ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் and ஃபேண்டஸி லெவன்!


ஐபிஎல் 2022 தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

போட்டி தகவல்கள்

 

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - டிஒய் பாட்டீல் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை பொறுத்தவரை அறிமுக அணி என்று சொல்ல முடியாத அளவுக்கு அபாரமாக விளையாடி வருகிறது.இதுவரை விளையாடிய 3 போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளது குஜராத். சேஸிங் செய்யும்போதும் சரி, டிபண்ட் செய்யும்போதும் சரி, விட்டுக்கொடுக்கும் எண்ணத்திற்கே இடம் கொடுக்காமல் கடுமையாக போராடி வெற்றியை பெறுகிறது குஜராத்.

பேட்டிங்கை பொறுத்தவரை அட்டகாச பார்மில் இருக்கும் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இக்கட்டான சூழல் தரும் அழுத்தத்தை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், அபாரமாக விளையாடும் ராகுல் தெவாட்டியா குஜராத்துக்கு கூடுதல் பலம். தமிழக வீரர் சாய் சுதர்சனும் பேட்டிங்கில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். 

பந்துவீச்சில் ரஷித் கான், முகமது ஷமி, ஃபர்குஷன் என பலம் வாய்ந்த பவுலர்களை வைத்து எதிரணியின் பேட்டிங்கை துவம்சம் செய்கிறது குஜராத். பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லாமல், தன் இயல்பான பார்மை அந்த அணி வெளிப்படுத்தினாலே சன் ரைசர்ஸை எளிதாக சாய்த்து விட முடியும்.

மறுபக்கம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றிப்பாதைக்கு சமீபத்தில் தான் திரும்பியது. ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக படுதோல்வியை தழுவிய அந்த அணி, சென்னை அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. அதே வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் இந்த ஆட்டத்திலும் சன் ரைசர்ஸ் களமிறங்கும். 

பார்முக்கு வராமல் இருந்த அபிஷேக் ஷர்மாவும் கேன் வில்லியன்சனும் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரான் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். 

உம்ரான் மாலிக், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பவுலிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் குஜராத் பேட்டிங் லைன் அப்பிற்கு கடும் போட்டியை அளிக்க இயலும். அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடும்போது மட்டுமே பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்த இயலும். 

உத்தேச அணி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக்/ கார்த்திக் தியாகி, டி நடராஜன்.

குஜராத் டைட்டன்ஸ் : மேத்யூ வேட், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் - ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, ராகுல் திவேத்தியா
  • பந்துவீச்சாளர்கள் - டி நடராஜன், ரஷித் கான், முகமது ஷமி, லாக்கி ஃபர்குசன்.

 

 

Title Winner -ஆன Bala ! Runner Up - Niroop! Bigg Boss Ultimate Grand Finale கடைசி நிமிடங்கள்! Simbu


Title Winner -ஆன Bala ! Runner Up - Niroop! Bigg Boss Ultimate Grand Finale கடைசி நிமிடங்கள்! Simbu


Sunday, April 10, 2022

சூப்பர்டெக்: சோதனை குண்டு வெடிப்பு அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் நரம்புகளை அமைதிப்படுத்துகிறது | நொய்டா செய்திகள்



அதிர்வு அளவுகள் கண்காணிக்கப்பட்டன, எனவே குண்டுவெடிப்பால் உதைக்கப்பட்ட தூசி அளவு இருந்தது.

நொய்டா: ஞாயிற்றுக்கிழமை எடிஃபைஸ் இன்ஜினியரிங் நடத்திய சோதனை குண்டுவெடிப்பு மற்றும் அது பயன்படுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் இரட்டை கோபுரங்களைச் சுற்றியுள்ள சமூகங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் நம்பிக்கையை உயர்த்தியது.
அதிர்வு அளவுகள் கண்காணிக்கப்பட்டன, எனவே குண்டுவெடிப்பால் உதைக்கப்பட்ட தூசி அளவு இருந்தது. கட்டடங்களின் கட்டமைப்பு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எமரால்டு கோர்ட் RWA இன் தலைவர் யுபிஎஸ் தியோடியா கூறுகையில், “விசாரணை மிகவும் வெற்றிகரமாக இருந்தது. இது குடியிருப்பாளர்களிடையே, குறிப்பாக இரட்டை கோபுரங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு...

விரிவாக படிக்க >>

தமிழகம் முழுவதும் 60 இடங்களில் பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள்: அமைச்சர் முத்துசாமி பேட்டி



சேலம்: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று காலை சேலம் வந்தார். சேலம் அய்யந்திருமாளிகை வீட்டு வசதிவாரிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் 195 இடங்களில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதில், 60 இடங்களில் உள்ள குடியிருப்புகள் இடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. அங்கெல்லாம் அந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை...

விரிவாக படிக்க >>

Meenam மீனம் । 11.4.22 இன்றைய ராசி பலன் Indraya Rasi Palan Today rasipalan I#shorts #Pisces


Meenam மீனம் । 11.4.22 இன்றைய ராசி பலன் Indraya Rasi Palan Today rasipalan I#shorts #Pisces


😍அதிகாலையில் இந்த ஒருவரி மந்திரம் சொன்னால் ஏழை கூட பணக்காரன் ஆகமுடியும்🤩 |🥰 Sattaimuni Nathar🥰


😍அதிகாலையில் இந்த ஒருவரி மந்திரம் சொன்னால் ஏழை கூட பணக்காரன் ஆகமுடியும்🤩 |🥰 Sattaimuni Nathar🥰


Beast Team-மை தன் Rolls Royce-ஸில் ஜாலியா Ride கூட்டிப்போன Vijay 😍 - Unseen Video | #shorts


Beast Team-மை தன் Rolls Royce-ஸில் ஜாலியா Ride கூட்டிப்போன Vijay 😍 - Unseen Video | #shorts


Saturday, April 9, 2022

MI: ‘ஒழுங்க விளையாடுங்க பாஸ்’…இல்லைனா இடம் கிடைக்காது: சீனியருக்கு ரோஹித் எச்சரிக்கை!



ஐபிஎல் 15ஆவது சீசனின் 18ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்றஆர்சிபிமுதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மும்பை இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் இருவரும் தலா 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். அடுத்து டிவோல்ட் பிராவிஸும் 8 (11) சிறபாக சோபிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து திலக் வர்மா, கெய்ரன் பொல்லார்ட் இருவரும் டக் அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். இந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி ரன்களை குவிக்க...

விரிவாக படிக்க >>

கடைசி பந்தில் கிளீ்ன் போல்டானார் இம்ரான் : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி| Dinamalar



இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பரபபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் சூறாவளி சுழற்றி அடித்தது. பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி பதவி விலக வலியுறுத்தி வந்தன. இருப்பினும் நான் கிரிக்கெட் வீரன்.கடைசி பந்து வரையிலும் நம்பிக்கையுடன் போராடுவேன் என பிரதமர் இம்ரான் கூறி வந்தார்.

இதனிடையே அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பார்லியின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இருப்பினும் எதிர்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை...

விரிவாக படிக்க >>

Friday, April 8, 2022

கனடாவில் இந்திய மாணவர் சுட்டு கொலை: உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை



கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கனடாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் கனடா தலைநகர் டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த வியாழக்கிழமை சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவன் கார்த்திக் வாசுதேவை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது .

கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் கார்த்திக்கின் உடலை இந்தியா...

விரிவாக படிக்க >>