Tuesday, March 22, 2022

🔴BREAKING: TN school & College Closed Again | 4th wave Again Lockdown |தமிழக அரசின் திடீர் அறிவிப்பு


🔴BREAKING: TN school & College Closed Again | 4th wave Again Lockdown |தமிழக அரசின் திடீர் அறிவிப்பு


💰பணம் சேர பரிகாரம் | கோடி கோடியாய் பணம் பெறுக செய்யவேண்டிய 10 வழிமுறை💰 | Sattaimuni Nathar


💰பணம் சேர பரிகாரம் | கோடி கோடியாய் பணம் பெறுக செய்யவேண்டிய 10 வழிமுறை💰 | Sattaimuni Nathar


தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்


தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்


இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23.03.2022 முதல் 25.03.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

23ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக்கடல், வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 23 முதல் மீண்டும் முழு ஊரடங்கு - அரசு திடீர் முடிவால் பரபரப்பு!


மார்ச் 23 முதல் மீண்டும் முழு ஊரடங்கு - அரசு திடீர் முடிவால் பரபரப்பு!


கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது.

கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள சுாங்சுன், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில்முழு ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கடந்த இரண்டு வாரங்களாக, கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் முகக் கவசத்தை, வரும் 23 ஆம் தேதி முதல், பொது மக்கள் வீட்டிற்குள் அணிய வேண்டும் ஆஸ்திரியா சுகாதாரத் துறை அமைச்சர் ஜோஹன்னஸ் ரவுச் தெரிவித்து உள்ளார்.
இதேப் போல், தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
முழு ஆண்டு தேர்வுகள் ரத்து - மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
கடந்த 5 ஆம் தேதி அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் ஆஸ்திரியா அரசு நீக்கியது. அதன்படி பொது இடங்கள், பொது போக்குவரத்து, மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மட்டுமே முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கும் முதல் நாடு ஆஸ்திரியா என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா கட்டுப்பாடு - ஊரடங்கு குறித்து தமிழக முதல்வர் ஆய்வு


கரோனா கட்டுப்பாடு - ஊரடங்கு குறித்து தமிழக முதல்வர் ஆய்வு


Sorry, Readability was unable to parse this page for content.

Friday, March 18, 2022

காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையை ஏற்க தயார்?


காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையை ஏற்க தயார்?


வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக இறுக்கத்தை தளர்த்தியும் வளைந்தும் காங்கிரஸ் கொடுக்கும். பாஜகவை எதிர்க்க பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல், காங்கிரஸின் பலவீனம், காங்கிரஸ் செய்ய வேண்டிய மீள் கட்டமைப்புப் பணிகள் எனப் பலவற்றையும் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஜி 23 என்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் சிதம்பரத்தின் பேட்டி கவனம் பெறுகிறது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி தொடர்பாக மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். “தேர்தல் தோல்விக்குப் பிறகு தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை ஏற்கவில்லை. காங்கிரஸுக்கு புதிய நிரந்தரத் தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே காரிய கமிட்டியின் விருப்பம். அதற்கான தேர்தல் நடைபெற ஆகஸ்ட் வரை ஆகலாம். அதுவரை சோனியா தலைமையில்தான் நாங்கள் பணியாற்றப் போகிறோம்.

ஜி - 23 தலைவர்கள் காந்தி குடும்பத்தினர் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை காந்தி குடும்பத்தினரை மட்டுமே தேர்தல் தோல்விக்குக் கைகாட்டுவது சரி அல்ல. தேர்தல் தோல்விக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இங்கு யாருமே பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. பொறுப்பு என்பது சோனியா, பிரியங்கா, ராகுல் மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், வட்டம் என அனைத்து காங்கிரஸ் உறுப்பினருக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, தோல்விக்கு அகில இந்திய தலைமை மட்டும் பொறுப்பாகாது. நிரந்தரத் தலைவரை உடனே அறிவிக்கக் கோருகிறார்கள். ஆகஸ்டில் தேர்தல் நடத்தி அறிவிப்போம் என நாங்கள் சொல்கிறோம். ஆகஸ்டில் கட்சிக்கு நிரந்தரத் தலைமை கிடைக்கும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆகையால் ஆகஸ்ட் வரை காங்கிரஸ் கட்சியில் விரிவான சீர்த்திருத்தங்களை செய்யப்பட வேண்டும். அதற்குள் கட்சியில் பிளவு எதுவும் ஏற்படாது என்று நம்புகிறேன். கட்சியில் பிளவை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று ஜி - 23 தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் நிச்சயமாக சில விஷயங்களில் இறுக்கத்தைத் தளர்த்தும். வளைந்து கொடுத்தே போகும். இது மம்தாவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். மாநில வாரியாக பாஜக எதிர்ப்பு அணியை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையின் கீழ் நாங்கள் பாஜகவை எதிர்க்கத் தயாராக உள்ளோம். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்ப்பை வலுப்படுத்தினால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகும்.

காங்கிரஸின் பலவீனம் என்றால், மாநில அளவிலான பலவீனங்கள்தான். நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் சிதிலமடைந்திருக்கிறது. அங்கெல்லாம் காங்கிரஸ் கமிட்டியைக் கலைத்துவிட்டு புதிதாக வட்ட அளவிலிருந்து கட்சியைக் கட்டமைக்க வேண்டும். இந்த பலவீனத்தை தலைமையிடம் எடுத்துரைத்துள்ளேன். இதைத்தான் ஜி-23யின் குலாம் நபி ஆசாத், கபில் சிபலும் வலியுறுத்துகின்றனர். நிறைய இடங்களில் காங்கிரஸுக்கு தலைவர்களே இல்லை. தொண்டர்கள்தான் இருக்கின்றனர். அரசியலில் ஈடுபாடு கொண்டோரை அடையாளம் கண்டு கட்சிப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கட்சிக்காக 24/7 நேரம் உழைக்கும் தலைவர்கள் வேண்டும். முக்கியமாக அவர்கள் 40, 50, 60 வயதைத் தாண்டாதவர்களாக இருக்க வேண்டும். இந்தக் கட்டமைப்புப் பணிக்காக நிதி ஆதாரம் வேண்டும். எல்லா இடங்களுக்கும் நிதி சென்று சேர்ந்தால்தான் மீள் கட்டமைப்பு சாத்தியம்" என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.