Sunday, May 22, 2022

குரங்கு காய்ச்சலை பற்றி அனைவரும் கவலை கொள்ள வேண்டும் – அமெரிக்க அதிபர்.!


குரங்கு காய்ச்சலை பற்றி அனைவரும் கவலை கொள்ள வேண்டும் – அமெரிக்க அதிபர்.!


உலக நாடுகளை மெல்ல மிரட்டி வரும் குரங்கு காச்சல் அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற 12 நாடுகளில் பரவிய நிலையில் 92 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.

இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள ஒரு விமான தளத்தில் ஜப்பானுக்கு ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் புறப்படுவதற்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, குரங்கு காய்ச்சலைப் பற்றி அனைவரும் கவலை கொள்ள வேண்டும். அமெரிக்க சுகாதார அதிகாரிகள் சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை ஆராய்ந்து வருகின்றனர். நாங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் தடுப்பூசிகள் கிடைக்க கூடும் என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment