Tuesday, April 19, 2022

பழநியில் தொடர் கோடை மழையால் வயல்களில் உழவுப்பணி தீவிரம்



பழநி: பழநி பகுதியில் தொடர் கோடை மழையால், வயல்களில் உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து கண்மாய்களில் தேக்கும் தண்ணீரை நம்பியே விவசாய தொழில் உள்ளது. கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  இதனால், அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் கோடை விவசாயத்திற்கு தயாராகி உள்ளனர். பழநி அருகே பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, பெருமாள்புதூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் வயல்களில் உழவுப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டிராக்டர்கள் மற்றும் மாடுகள் மூலம் உழவுப்பணி நடந்து வருகிறது. கோடை மழை பெய்ய துவங்கியதைத்...

விரிவாக படிக்க >>

No comments:

Post a Comment