
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், WEST SIDE STORY படத்தில் நடித்துள்ள அரியான டிபோஸ், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், WEST SIDE STORY படத்தில் நடித்துள்ள அரியான டிபோஸ், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சேட்டை நாளுக்கு நாள் கட்டுகடுங்காமல் செல்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்துதான் மாணவர்களின் நடத்தையில் பல மாற்றங்களை பார்த்து வருகிறோம் என ஆசிரியர்கள் வேதனைப் படுகின்றனர். மாணவர்கள் அப்படி என்னென்ன செய்கிறார்கள் என்பதற்கு பல புகைப்படங்களை இந்த செய்தியில் இணைத்துள்ளோம்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலை முடியை சரியாக வெட்டவில்லை என்று கூறிய...
விரிவாக படிக்க >>




இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23.03.2022 முதல் 25.03.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
23ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக்கடல், வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கடந்த இரண்டு வாரங்களாக, கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் முகக் கவசத்தை, வரும் 23 ஆம் தேதி முதல், பொது மக்கள் வீட்டிற்குள் அணிய வேண்டும் ஆஸ்திரியா சுகாதாரத் துறை அமைச்சர் ஜோஹன்னஸ் ரவுச் தெரிவித்து உள்ளார்.
இதேப் போல், தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
முழு ஆண்டு தேர்வுகள் ரத்து - மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
கடந்த 5 ஆம் தேதி அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் ஆஸ்திரியா அரசு நீக்கியது. அதன்படி பொது இடங்கள், பொது போக்குவரத்து, மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மட்டுமே முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கும் முதல் நாடு ஆஸ்திரியா என்பது குறிப்பிடத்தக்கது.

Sorry, Readability was unable to parse this page for content.